Posts

Showing posts from July, 2023

தென்னையின் மருத்துவம்

*தென்னம்பூ மணப்பாகு* பூலோகக் கற்பக விருட்சம்’ தென்னை மரத்துக்கு இன்னொரு பெயர்... தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மகத்துவமானது. தேங்காய் என்றால் சமையலுக்குத் தேங்காய்ப்பூ, தலைக்குத் தேய்க்க, தேங்காய் எண்ணெய் என இரண்டே உபயோகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தென்னையின் ஒவ்வொரு பகுதியும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பயன்படக்கூடியது. தென்னம் பூ (பூம்பாளை) தென்னை மரத்தின் பூ, சாப்பிடத்  துவர்ப்பாக இருக்கும். அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள், காலையில் வெறும் வயிற்றில் தென்னம் பூவைச் சாப்பிட்டு, உடனே பால் குடித்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, காலை உணவைச் சாப்பிடலாம்.  மாதவிலக்கு ஆகும் சமயத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும், கர்ப்பப்பை பிரச்னைகளைச் சரிப்படுத்தும். வெயில் காலத்தில் ஏற்படும் கடுப்புக் கழிச்சல் எனப்படும் வயிற்று வலி. இதனால், சிலருக்கு மலம் கழிக்கும்போது, ரத்தம்கூட வரலாம். இதற்குத் தீர்வாக, தென்னம் பூச்சாறு, தயிர் - தலா 100 மி.லி, அரை எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்தால், வயிற்று வலி குறைந்து,...

எளிய வீட்டு வைத்தியக் குறிப்புக்கள்

நோய் அறிகுறிகள் ஏற்படும் போது மருத்துவமனை செல்ல இயலாத சூழலில் வீட்டில் உள்ள மூலிகை உணவுப் பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடை...

ஆடாதோடா மூலிகை பயன்கள் ஆடாத உடலும் ஆடும் பாடாத குரலும் பாடும்

*ஆடாதொடா இலையில்(ஆடாதொடை) & தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்!*    👉 ஆடாதொடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால,ஆடாத உடலும் ஆடும்,பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இப்படிப்பட்ட ஆடாதொடை மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.  👉 காசம் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும். 👉 உடலில் ஏற்படும் வலிகள் குறைய ஆடாதொடை வேர்,கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும். 👉 ஈரல் வலி குறைய ஆடாதொடை இலைச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். மூச்சுத்திணறல் குணமாகும். 👉 நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும். 👉 சளித்தொல்லை குறைய ஆடாதொடை இலை,வெற்றிலை, துளசி,தூதுவளை இவைகளை எடுத்து லேசாக அரைத்து வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும்.  *இந்த இலைகள் மூலிகைப் பொடியாகவும் மணப்பாகு வடிவிலும் நாட்டு மருந்துக்கடை...

நிலாவாரை நிலவாகை மூலிகை விச முறிவு குணங்கள்

நிலாவாரை நிலவாகை என்றும் அழைக்கப்பெறும் மூலிகை அனைத்து வகையான விசகடிகளுக்கும் சிறந்தது மலமிளக்கி குணமுடையது அதிகம் சாப்பிட சுகபேதியாக்கும்.                    நிலவாகை சமுலம் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து எடுத்த சூரணத்தை   பேய்சுரைக் குடுக்கையில் அடைத்து இந்த சூரணத்தை வெரு கடி அளவு எடுத்து வெந்நீரில் உட்கொள்ள விஷ கடிகள் நீங்கும். 1.செருப்படி சாற்றில் சாப்பிட பெருச்சாளி கடி விஷம் தீரும்.  2.மூங்கில் இலைச் சாற்றில் சாப்பிட எலி கடி விஷம் தீரும்.  3.சாரணை இலை சாற்றில் சாப்பிட  மூஞ்சூரு விஷம் தீரும்.  4.உத்தாமணி இலைச் சாற்றில் சாப்பிட சிறு பாம்பு கடி விஷம் தீரும்.  5.விழுதி இலைச் சாற்றில் சாப்பிட நல்ல பாம்பு கடி விஷம் தீரும்.  6. சிறு குரிஞ்சான் சாற்றில் சாப்பிட விரியன் பாம்பு கடி விஷம் தீரும்.  7.எலுமிச்சம் பழ சாற்றில் சாப்பிட எல்லா விஷ கடிகளும் தீரும்.  8.சிறு பாகற்காய் சாற்றில் சாப்பிட தேள் செய்யான் நட்டுவாக்காளி விஷம் தீரும்.  9.செவ்அரளி அல்லது அவுரி வேர் சாற்றில் சாப்ப...

ஆண்களுக்கான அருமருந்து

ஆண்களுக்கான மன்மத வீரிய சூரணம்  தேவையான பொருட்கள்: முருங்கை விதை - 50 கிராம்  முருங்கை பிசின் - 50 கிராம் கோரைக்கிழங்கு - 50 கிராம் பூனைகாலி விதை - 50 கிராம் நிலப்பனங்கிழங்கு - 50 கிராம் ஓமம் - 50 கிராம் சாரப்பருப்பு - 50 கிராம் ஜாதிக்காய் - 50 கிராம் முருங்கை பிஞ்சு (நாரில்லாதது) - 100 கிராம் ஓரிதழ் தாமரை (சமூலம்) - 500 கிராம்  செய்முறை : அனைத்து மருந்துகளையும் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடித்து கொள்ளவும். இதை தினமும் பசும்பாலிலோ அல்லது வெள்ளாட்டு பாலிலோ கலந்து குடித்து வரவும்.  காலை, இரவு என இரண்டு வேளை உணவிற்கு பின். உபயோகம்: இதனை தொடர்ந்து சாப்பிட 60 வயதுள்ளவர்கள் கூட 20 வயது வாலிபனைப் போல் உடலுறவில் ஈடுபடலாம். உடலழகும், முகபொலிவும், உடல் ஆரோக்யமும் உண்டாகும். மற்றும் விந்தை தடிப்பாக்கி விந்து முந்துதலை கட்டுப்படுத்துகிறது. இத்துடன் லிங்கம் அயத்தங்கம் வெள்ளி பற்பங்கள் சேர்த்துண்ண சிறந்த பலன்கள் கிடைக்கிறது. மருந்து பலகீனத்திற்கு ஏற்றாற்போல மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளவும். மருந்துகள் ந...

மஞ்சட்காமாலை மருத்துவம்

கல்லீரல் மனித சரீரத்தின் முக்கியமான மிகப்பெரிய உள்ளுறுப்பு இதைக் கவனத்துடன் பாதுகாத்தல் வேண்டும் இதனால் பல்வேறு நோய்கள் தோன்றாது காக்கும். உடலில் அதிகரித்த பித்தம் கல்லீரலில் கொழுப்பு பேட்டி லிவர் Fatty liver கல்லீரல் சுருக்கம் லிவர் சிரோசிஸ் liver chirosis கல்லீரல் குறைபாடுகள் அதிகமாக மது அருந்தியதால் கல்லீரல் கெடுதல். இரவில் அதிக நேரம் கண் விழித்தல் பழைய அசுத்தமான நீரினைக்குடித்தல் போன்ற காரணங்களினால் மனித உடலில் மஞ்சட் காமாலை உருவாகி பிலிரூபின் என்னும் பித்த நீர் அதிகரித்து ரத்தத்தில் கலந்துவிடுகிறது Hepatitis b c போன்ற வைரஸ் தொற்றுகளும் உருவாகிறது. அதிகம் கல்லீரலுக்கு வேலை தருபவர்கள் இயற்கை Liver tonics tablets மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.மஞ்சட்காமாலைக்கு நமது மருத்துவமனையில் நோய்க்கு ஏற்ப பாரம்பரிய பச்சிலை மருந்து சித்த ஆயுர்வேத இயற்கை மருந்துகள் வழங்கி சிறந்தமுறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. Hepatitis b வைரசால் பணிக்காக வெளிநாடு செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கி நலமாக்கலாம்.  ஸ்ரீவைத்யநாத் வைத்யசாலா பாரதிபுரம் பள்ளபாளையம் கோவை 9597125669 ...

இயற்கை முறையில் பித்தம் காமாலை குறைய

*பித்தம் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்க்கும் இயற்கை மருத்துவ முறைகளும்* உடலில் பித்தம் அதிகமானால் மஞ்சட்காமாலை உண்டாகும் கைகால் எரியும். அல்சர் அசிடிட்டி உண்டாகும்.  👉கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கின்றோம். நம் செரிமானத்திற்கு உதவி, இன்றியமையாத பணியை இந்த பித்த நீர் தான் செய்கின்றது.  👉 முக்கியமாக அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது அதற்கு ஏற்றது போல் பித்த நீர் சுரந்து செரிமாணத்திற்கு  உதவுகிறது.    👉உடலில் பித்தம் அதிகமாகும்பொழுது வாய்வு பிரச்சனை, பாதம் மற்றும் உதடுகளில் வெடிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வறட்சியாகவும், கடினமாகவும்  காணப்படும்.   👉 உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பதினால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் உடலில் பித்தம் அதிகமாகும். அதேபோல் மது மற்றும்  புகைபிடித்தல் போன்ற மோசமான பழக்கங்களினால் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உடலில் பித்தத்தை அதிகரிக்கும்.   👉தினமும் அளவுக்கு அதிகமாக டீ, காபி போன்ற பானங்களை அருந்தும்பொழுது ப...

நவக்கிரகங்களின் ப்ரீதியும் பரிகாரங்களும்

🌺 *நவக்கிரக ப்ரீதியும் தோஷ* *பரிகாரங்களும்* நவகிரகங்களுக்கு  தனித்தனியாக தோஷ பரிகாரங்கள் மேற்கொள்ள சரியான வழிமுறைகள் ஜோதிடத்தில்  உள்ளன அந்தந்த கிரகங்களுக்கு பிடித்தவைகளை அந்த கிரக காலத்தில் செய்திட கிரகங்கள் மனமகிழ்வு ப்ரீதி அடைவார்கள் இதனால் நற்பலன்கள் கிட்டும். சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும். சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்திரம் முத்துமாலை வெள்ளரலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும். அங்காரக பகவானுக்குச் செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்துச் சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுத்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும். புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தா...

கைவிரல்களில் மருத்துவம்

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம். சுஜோக் மருத்துவம் என்று இம்முறையை பெயரிட்டு அழைக்கப்படுகிறது.  கட்டை விரல்; உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது. ஆள்காட்டி விரல்; உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது. நடுவிரல்; நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி...