ஆடாதோடா மூலிகை பயன்கள் ஆடாத உடலும் ஆடும் பாடாத குரலும் பாடும்
*ஆடாதொடா இலையில்(ஆடாதொடை) & தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்!*
👉 ஆடாதொடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால,ஆடாத உடலும் ஆடும்,பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இப்படிப்பட்ட ஆடாதொடை மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
👉 காசம் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும்.
👉 உடலில் ஏற்படும் வலிகள் குறைய ஆடாதொடை வேர்,கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும்.
👉 ஈரல் வலி குறைய ஆடாதொடை இலைச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். மூச்சுத்திணறல் குணமாகும்.
👉 நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும்.
👉 சளித்தொல்லை குறைய ஆடாதொடை இலை,வெற்றிலை, துளசி,தூதுவளை இவைகளை எடுத்து லேசாக அரைத்து வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும்.
*இந்த இலைகள் மூலிகைப் பொடியாகவும் மணப்பாகு வடிவிலும் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் வாங்கி உபயோகப்படுத்தி உடல் நலம் பெறுங்கள்
Comments
Post a Comment